அதிர்ச்சியூட்டும் வரதட்சனை மரணங்கள்
இஸ்லாமிய மார்க்கம் இயற்கையான மார்க்கமாகும். அதனால் தான் இதில் உள்ள சட்ட திட்டங்கள் மனிதனுடைய இயற்கை பண்பிற்கு இயல்பாகவே ஒத்துப் போகின்றது. ஆனால் அப்படிப்பட்ட சட்டதிட்டங்களை மனிதன் மீறும் பொழுது தான் இல்லாத பொல்லாத பிரச்சனைகளும் சமூக சீர்கேடுகளும் உண்டாகின்றன. அப்படிப்பட்ட சமுதாய சீர்கேடுகளில் ஒன்று தான் "வரதட்சணை "என்ற பிச்சை... அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கூறுகின்றான் "பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுங்கள்"(அத்தியாயம் 4 வசனம் 4) இவ் வசனத்தில் ஆண்களைப் பார்த்து பெண்களை நீங்கள் திருமணம் செய்ய நாடினால் அவர்களுக்கு உரித்தான மணக்கொடைகளை கொடுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றான்.. இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டம் ஒரு ஆண் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவன் அந்தப் பெண் கேட்கக்கூடிய அந்த பெண் வீட்டார் கேட்கக்கூடிய மணக்கொடைகளை கொடுக்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதைத்தான் கூறியிருக்கின்றார்கள். ஆனால் இந்தியா போன்ற நாடுகளிலே மாற்று கலாச்சாரத்தை பின்பற்றி இஸ்லாமியர்களும் வரதட்சனை என்ற பிச்சையை வாங்க ஆரம்பித்ததின் விளைவு எ...